"பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை"


கோவை, நவம்பர் 8: "பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை" என்று மேலவை உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி குற்றம் சாட்டினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நடந்த கோவை ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கனிமொழி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



கருப்பு பணமாக இருக்கும் 5 லட்சம் கோடி ரூபாய் மீண்டும் புழக்கத்திற்கு வராது என சொன்னார்கள்.

ஆனால் 99 சதவீதம் பணம் திரும்பி வந்து விட்டது. ஒரு சதவீதம் மட்டுமே கருப்பு பணம் முடங்கி இருக்கின்றது.

கள்ள நோட்டு புழக்கத்தில் இருக்கின்றது, தீவிரவாதம் முடங்க வில்லை என தெரிவித்த அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை.

பாதிப்பில் இருந்து மக்கள் இன்னமும் மீண்டு வரவில்லை. ஒராண்டுக்கு பின்னரும் அதே நிலை நீடிக்கின்றது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகரித்து இருந்த டிஜிட்டல் பரிவர்த்தணை தற்போது மீண்டும் குறைந்து இருக்கிறது.

கலைஞரை பிரதமர் மோடி சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் 2ஜி தீர்ப்பிற்கு குறித்து பேசி கொச்சைப்படுத்த வேண்டாம் திமுக தலைவரை பார்க்கவே பிரதமர் மோடி வீட்டிற்கு வந்தார் என்றும் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...